BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 18 June 2013

வாய்ப்புக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டேன்: சினேகா அதிரடி

எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா.தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகா, திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

திருமணத்துக்கு பிறகு தான் அதன் ஷூட்டிங் முடிந்து வெளியானது.

சினிமா வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே நான் ஒரு எல்லை வகுத்திருக்கிறேன்.
எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வந்தால் தான் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்கு வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி கொண்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

Post a Comment

 
Copyright © 2013 Tamil Space Updates
Designed by Bharath Technologies